< Back
மாநில செய்திகள்
கருகிய பயிர்களுடன்  ஆர்ப்பாட்டம்
திருவாரூர்
மாநில செய்திகள்

கருகிய பயிர்களுடன் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
7 Oct 2023 7:15 PM GMT

முத்துப்பேட்டை அருகே கருகிய பயிர்களுடன் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தில்லைவிளாகம்;

முத்துப்பேட்டையை அடுத்து உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி நாச்சிகுளம் கடை வீதியில். கருகிய நெற்பயிகளுடன் வந்து மனித நேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி நீரின் தமிழகத்துக்குரிய பங்கை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் மத்திய- மாநில அரசுகள் உடனடியாக காவிரி நீரை பெற்றுத்தர கோரியும் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளர் ஜான் முகமது தலைமை தாங்கினார். துணைப்பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் பேசினாா். முன்னதாக மாநில செயலாளரும் மாவட்ட மேலிட பொறுப்பாளருமான நாகை முபாரக் போராட்டத்தை தொடங்கி வைத்தார் போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் சேக் அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்