< Back
மாநில செய்திகள்
பாளையம் சுங்கச்சாவடியில்அமைப்புசாரா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி
மாநில செய்திகள்

பாளையம் சுங்கச்சாவடியில்அமைப்புசாரா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
28 April 2023 7:00 PM GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம் சுங்கச்சாவடி முன்பு அனைத்து மாவட்ட ஓட்டுனர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கத்தினர் சார்பில் கருப்பு கொடி ஏந்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஓட்டுநர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுப்பதுடன், அவர்களின் பாதுகாப்பை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் லாரி ஓட்டுனர்களுக்கு என பாதுகாப்பான பார்க்கிங் வசதி மற்றும் அத்தியாவசிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். இந்தியா முழுவதும் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். அத்திப்பள்ளி சோதனை சாவடியை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட தலைவர் மனோகரன், மாநில செயற்குழு உறுப்பினர் வேலு, மாவட்ட செயலாளர் ஆனந்தன், மாவட்ட பொருளாளர் பூபதி உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் திரளான டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்