< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில்விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
3 March 2023 7:00 PM GMT

நாமக்கல் அருகே உள்ள திண்டமங்கலத்தில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபடுவதை சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ரேகேஷ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் கொடுக்க சென்றனர்.

அப்போது அங்கு எழுத்தராக பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அவர்களை ஒருமையில் பேசி அவமதிப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், பணி இடைநீக்கம் செய்தார். இதற்கிடையே பாலமுருகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை அனைத்து கோவில்களிலும் உறுதிப்படுத்திட கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் தலைமை தாங்கினார். கட்சியின் முதன்மை செயலாளர் பாவரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்