< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில்காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
6 Feb 2023 7:00 PM GMT

அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் நேற்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் எல்.ஐ.சி. நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் வீரப்பன், செல்வராஜ், பாச்சல் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாநில ஓ.பி.சி. துணைத்தலைவர் செந்தில், முன்னாள் மாணவர் காங்கிரஸ் செயலாளர் பாலாஜி, நகர தலைவர் மோகன், வட்டார தலைவர்கள் ஜெகநாதன், தங்கராஜ், இளங்கோ மற்றும் பேரூர் செயலாளர்கள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்