< Back
மாநில செய்திகள்
திருச்செங்கோட்டில்  சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

திருச்செங்கோட்டில் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
23 May 2022 1:45 PM GMT

திருச்செங்கோட்டில் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு வட்டார சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திருச்செங்கோட்டில் உள்ள அண்ணா சிலை அருகே நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், நூல் மற்றும் பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரியும் விசைத்தறியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்டார சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். செயலாளர் காயத்ரி சுப்பிரமணியம், பொருளாளர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வட்டாரத்தை சேர்ந்த 13 விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உதவி கலெக்டர் அலுவலகம் முன் கோஷம் எழுப்பினர். பின்னர் உதவி கலெக்டர் இளவரசியிடம் கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்தனர்.

மேலும் செய்திகள்