< Back
மாநில செய்திகள்
ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி

தினத்தந்தி
|
5 Aug 2023 3:34 PM GMT

ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 250 ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது.

இதில் வகுப்பறை மேலாண்மை மற்றும் பெற்றோர் பங்களிப்பு என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியினை பள்ளிக்கல்வி துறை இணை இயக்குனர் நரேஷ் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோர் பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர். கரூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சத்யாவதி மற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள் சுசீலா மலர்விழி, ஆனந்த், கல்யாணசுந்தரம் ஆகியோர் பயிற்சியினை ஒருங்கிணைப்பு செய்தனர்.

மேலும் செய்திகள்