< Back
மாநில செய்திகள்
ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி

தினத்தந்தி
|
8 July 2023 6:40 PM GMT

ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் பெரம்பலூர், எசனை, சிறுவாச்சூர், குரும்பலூர், அம்மாபாளையம் ஆகிய 5 இடங்களில் உள்ள பள்ளிகளில் நடந்தது. பயிற்சி முகாமை பெரம்பலூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவகி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் தொடங்கி வைத்தனர். பயிற்சியை பள்ளி கல்வித்துறையின் உதவி திட்ட அலுவலர் (தொடக்க நிலை) ரமேஷ், வட்டார கல்வி அலுவலர்கள் ஜோதிலட்சுமி, அருண்குமார், டயட் விரிவுரையாளர் உமா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன் ஆகியோர் பார்வையிட்டனர். முகாமில் கருத்தாளர்கள் பள்ளி மாணவ-மாணவிகளின் உடல் நலம், மன நலம் பேணுதல், நல்வாழ்வு மற்றும் சிறப்பு தேவை கொண்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை கையாள்வது ஆகிய தலைப்புகளில் 103 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்