< Back
மாநில செய்திகள்
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

தினத்தந்தி
|
23 Sep 2022 7:06 PM GMT

மேலத்தானியத்தில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

காரையூர் அருகே உள்ள மேலத்தானியத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டன. இதில் முதல் பரிசை திருமலைகுடி அணியினரும், 2-ம் பரிசை மேலத்தானியம் அணியினரும், 3-ம் பரிசை வையாபுரிப்பட்டி அணியினரும், 4-ம் பரிசை பொன்னமராவதி அணியினரும் தட்டி சென்றனர். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டிகளை மேலத்தானியம், காரையூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

மேலும் செய்திகள்