< Back
மாநில செய்திகள்
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதியை பிரதமர் மோடி ஏற்றி வைக்கிறார்-அமைச்சர் மெய்யநாதன் தகவல்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதியை பிரதமர் மோடி ஏற்றி வைக்கிறார்-அமைச்சர் மெய்யநாதன் தகவல்

தினத்தந்தி
|
17 Jun 2022 6:42 PM GMT

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதியை பிரதமர் மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் ஏற்றி வைக்கிறார் என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை மாதம் 28-ந் தேதி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் பிரதமர் மோடி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து தொடங்கி வைக்கிறார்.

188 நாடுகள் பங்கேற்பு

இந்த ஜோதி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 பெரும் நகரங்களுக்கு சென்று ஜூலை மாதம் 28-ந் தேதி தமிழகம் கொண்டு வரப்பட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் ஒப்படைக்கப்பட்டு போட்டி தொடங்கி வைக்கப்பட உள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை இல்லாத வகையில் 188 நாடுகள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். இதையொட்டி வீரர்-வீராங்கனைகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் போட்டியை நடத்துவதற்கான அனைத்து வகையான முன்னேற்பாட்டு பணிகளை 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஜூலை மாதம் 15-ந் தேதிக்குள் அனைத்து பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்