< Back
மாநில செய்திகள்
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

தினத்தந்தி
|
9 Aug 2022 3:50 PM GMT

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழாவையொட்டி சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பிரதோஷ நாயனார் புறப்பாடு நடைபெற்றது.இதேபோல தோப்புத்துறை கைலாசநாதர்கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர், கோடியக்காடு குழவர், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர், நாலுவேதபதி அமராபதீஸ்வரர், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையர், அகரம் அழகியநாதர், கரியாப்பட்டினம் கைலாசநாதர், வடகட்டளை சோமநாதர் மற்றும் ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில், குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்