< Back
மாநில செய்திகள்
வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
திருவாரூர்
மாநில செய்திகள்

வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

தினத்தந்தி
|
13 Aug 2023 6:45 PM GMT

வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் சிவபெருமான் மேற்கு முகமாய் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் சிவபெருமான், நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து காசிவிசுவநாதர், பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு கற்பகவல்லி, சதுரங்கவல்லபநாதர், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதேபோல் பூவனூர் கைலாசநாதர் கோவில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்