< Back
மாநில செய்திகள்
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
திருவாரூர்
மாநில செய்திகள்

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

தினத்தந்தி
|
26 July 2022 5:26 PM GMT

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் ருத்ரகோடீஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள்பொடி, வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல் வலங்கைமான் அருணாசலேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், காசி விசுவநாதர் கோவில், விருப்பாச்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில், அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் கோவில், நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், சந்திரசேகரபுரம் சந்திரமவுலீஸ்வரர் கோவில், சின்னகரம் ஆண்டான்கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

மேலும் செய்திகள்