< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோருக்கு பயிற்சி
சிவகங்கை
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோருக்கு பயிற்சி

தினத்தந்தி
|
18 March 2023 6:45 PM GMT

எஸ்.புதூர் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்களுக்கான ஒருங்கிணைப்பு பயிற்சி நடைபெற்றது.

எஸ்.புதூர்

எஸ்.புதூர் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்களுக்கான ஒருங்கிணைப்பு பயிற்சி நடைபெற்றது.இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள் கணேசன், ஜெயலெட்சுமி, கிறிஸ்டோபர், டாக்டர் ரபீக் ராஜா ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர்.

உள்ளடங்கிய கல்வி மற்றும் அதில் வழங்கப்படும் உதவித்தொகை சலுகைகள், மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் குறித்தும் சிறப்பாசிரியர் ராதாகிருஷ்ணன் எடுத்துக்கூறினார். முடிவில் உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் கணேசன் நன்றி கூறினார். இதில் எஸ்.புதூர் வட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்