< Back
மாநில செய்திகள்
இன்று மின்சாரம் நிறுத்தம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

இன்று மின்சாரம் நிறுத்தம்

தினத்தந்தி
|
21 Nov 2022 3:52 PM GMT

கொசவப்பட்டி, செங்குறிச்சி பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

திண்டுக்கல் அருகே உள்ள கொசவபட்டி மற்றும் செங்குறிச்சி துணை மின்நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி கொசவபட்டி, செம்மடைபட்டி, கொழிஞ்சிபட்டி, தொட்டியபட்டி, சட்டக்காரன்பட்டி, எமக்கலாபுரம், கைலாசம்பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, ராமன்செட்டியபட்டி, கோணப்பட்டி, நத்தம்மாடிபட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லுப்பட்டி, தவசிமடை, விராலிபட்டி, நொச்சிஓடைப்பட்டி, வடகாட்டுப்பட்டி, குரும்பபட்டி, கவராயப்பட்டி, கூவனூத்து, ராஜாக்காபட்டி, சிலுவத்தூர், புகையிலைபட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகலை திண்டுக்கல் தெற்கு உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்