< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டியில் மின்தடை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டியில் மின்தடை

தினத்தந்தி
|
28 July 2022 1:02 AM GMT

துணைமின் நிலையத்தில் உள்ள மின்சாதனங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட நாட்களில் திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டியில் ஆகிய பகுதிகளுக்கு மின்தடை ஏற்படும்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின்நிலையத்தில் அலகு 4-க்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் மட்டும் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின்துறை உதவி செயற்பொறியாளர் முரளி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் துணைமின் நிலையத்தில் உள்ள மின்சாதனங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மற்றும் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் தடை செய்யப்பட உள்ளது. அப்போது, திருவள்ளூர் நகரத்தில் உள்ள ஐ.ஆர்.என். பின்புறம், ராஜாஜிபுரம், ஸ்ரீநிகேதன் பள்ளி, எஸ்.வி.கோவில் தெரு, காந்திபுரம், கணபதி நகர், தேவி மீனாட்சி நகர், என்.ஜி.ஓ. காலனி ஆகிய பகுதிகளுக்கும் மின்சார வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், திருத்தணி கோட்ட நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் திருத்தணி துணை மின்நிலையத்திற்குட்பட்ட சரஸ்வதி நகர், வள்ளியம்மாபுரம், வள்ளியம்மாபுரம் குடியிருப்பு பகுதி மற்றும் பெருமாள்தாங்கல் புதூர் ஆகிய இடங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்