< Back
மாநில செய்திகள்
பராசக்தி மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா
விருதுநகர்
மாநில செய்திகள்

பராசக்தி மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா

தினத்தந்தி
|
24 March 2023 7:01 PM GMT

பராசக்தி மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நாளை தொடங்குகிறது.


விருதுநகரில் பராசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து அம்மன் பல்வேறு மகமைகளின் மண்டகப்படியில் சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பங்குனி பொங்கல் விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் கோவிலை சுற்றி பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு பிரார்த்தனையை செலுத்துவர். 3-ந் தேதி அக்னி சட்டி திருவிழா நடைபெறும். அன்றைய தினம் காப்பு கட்டி விரதம் இருந்த ஆண்களும், பெண்களும் மஞ்சள் ஆடை அணிந்து அக்னிசட்டி ஏந்தி கோவிலுக்கு வந்து தங்கள் பிரார்த்தனையை செலுத்துவர். குழந்தையை கரும்பு தொட்டிலிட்டும், பறவை காவடி எடுத்தும், அலகு குத்தி தேரிழுத்தும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனையை செலுத்துவர். அதற்கு மறுநாள் தேரோட்டம் நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்