< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதற்காக ஆசிரியர் திட்டியதால் மனஉளைச்சல் - ரெயில் முன் பாய்ந்து பாலிடெக்னிக் மாணவன் தற்கொலை

14 Nov 2022 6:42 PM IST
வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதற்காக ஆசிரியர் திட்டியதால் மனஉளைச்சல் அடைந்த பாலிடெக்னிக் மாணவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்,
ஆவடி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை செய்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் தற்கொலைசெய்து கொண்ட மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதற்காக ஆசிரியர் திட்டியதால் மனஉளைச்சல் அடைந்த பாலிடெக்னிக் மாணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.