< Back
மாநில செய்திகள்
பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

தினத்தந்தி
|
17 Sep 2023 6:45 PM GMT

பாளையங்கோட்டையில் பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாளையங்கோட்டையில் பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க.

தந்தை பெரியார் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தி.மு.க. சார்பில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகி சுப சீதாராமன், மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், பாளையங்கோட்டை மண்டல சேர்மன் பிரான்சிஸ், கவுன்சிலர்கள் சுதா மூர்த்தி, ராமகிருஷ்ணன், கந்தன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், பகுதி செயலாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஜோதிபுரம் ஊர் நாட்டாண்மை தங்கராஜ், மாவட்ட துணை தலைவர் அருள்ராஜ், மூத்த தலைவர் லெனின் பாரதி, மாவட்ட துணை தலைவர்கள் வெள்ளை பாண்டியன், மாரியப்பன், மாவட்ட செயலாளர்கள் செய்யதுஅலி, மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திராவிட கழகம்

திராவிட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் முத்துவளவன் தலைமையிலும், ம.தி.மு.க. சார்பில் மனப்படை மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆதித்தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சுடலைராஜ் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள், செயலாளர் குழந்தைவேலு, வக்கீல் பழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்