< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
விருதுநகர் ெரயில் நிலையத்தில் போலீசார் சோதனை
|20 Nov 2022 8:05 PM GMT
விருதுநகர் ெரயில் நிலையத்தில் போலீசார் சோதனை செய்தனர்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் தீவிர சோதனை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விருதுநகர் ெரயில் நிலையத்தில் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மோகன் தலைமையில் போலீசார் ெரயில் பயணிகள் மற்றும் ெரயில் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் ெரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பார்சல்கள் ஆகியவற்றில் தீவிரசோதனை நடத்தினர். மேலும் ெரயில் நிலைய வளாகப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.