< Back
மாநில செய்திகள்
பெண்கள்-குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசாரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெண்கள்-குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசாரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
19 Sep 2022 6:51 PM GMT

பெண்கள்-குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசாரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேலூர் கிராம பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசாரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து, பெண் போலீஸ் சுமா ஆகியோர் இணைந்து பொதுமக்களிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் செய்திகள்