< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
கொள்ளை வழக்கில் ஆஜராகாததுணை போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு
|6 March 2023 6:39 PM GMT
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சுரேஷ்குமார். இவர் தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2017-2018-ம் ஆண்டுகளில் பரமத்தியில் நடந்த 2 கொள்ளை தொடர்பான வழக்கு பரமத்தி கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு சுரேஷ்குமார் ஆஜராகவில்லை. இதையடுத்து பரமத்தி சார்பு கோர்ட்டு நீதிபதி பிரபாகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாருக்கு பிடிவாரண்டு மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.