< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  போலீசாருக்கான புத்தாக்க பயிற்சி
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் போலீசாருக்கான புத்தாக்க பயிற்சி

தினத்தந்தி
|
15 July 2022 4:52 PM GMT

நாமக்கல்லில் போலீசாருக்கான புத்தாக்க பயிற்சி

நாமக்கல்லில் போலீசாருக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தலைமை தாங்கி பேசினார். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

நாமக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் செல்வராஜ் கலந்து கொண்டு புலன் விசாரணை முடிக்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்திற்கு வரும் வழக்கு கோப்புகளை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத்தரக்கூடிய வகையில் புலன் விசாரணை மேம்படுத்துவது குறித்து விளக்கம் அளித்தார். போக்சோ சட்டம், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டங்களில் வந்துள்ள புதிய சட்ட திருத்தங்கள் மற்றும் நுணுக்கங்கள் குறித்து மதுரை வக்கீல் சிவகுமார் விளக்கமளித்தார். இதில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்