< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
பிளஸ்-2 மாணவி மாயம்
|28 May 2023 6:45 PM GMT
விழுப்புரம் அருகே பிளஸ்-2 மாணவி மாயம்
செஞ்சி
விழுப்புரம் அருகே உள்ள ஏழு செம்பொன் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் மகள் அபிநயா(வயது 18). கெடார் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் இவர் சம்பவத்தன்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அபிநயாவை காணாததால் இது குறித்து கஞ்சனூர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.