< Back
மாநில செய்திகள்
பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: பொடுகு பிரச்சினையில் தலைமுடியை வெட்டியதால் விபரீத முடிவு
மாநில செய்திகள்

பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: பொடுகு பிரச்சினையில் தலைமுடியை வெட்டியதால் விபரீத முடிவு

தினத்தந்தி
|
24 Aug 2022 9:26 PM GMT

பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்:

கரூர் வெண்ணைமலை அரசன்நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் ஸ்ரீனா (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தநிலையில் ஸ்ரீனாவுக்கு தலையில் பொடுகு பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் அவருக்கு முடியை (பாப் கட்டிங்) வெட்டிவிட்டதாக தெரிகிறது.

இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட ஸ்ரீனா நேற்று முன்தினம் அவரது வீட்டின் ஒரு அறையில் தூக்குப்போட்டு கொண்டார். இதைக்கண்ட அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஸ்ரீனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு வந்து, ஸ்ரீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்