< Back
மாநில செய்திகள்
பிளஸ்-1 மாணவி மாயம்
அரியலூர்
மாநில செய்திகள்

பிளஸ்-1 மாணவி மாயம்

தினத்தந்தி
|
18 Sep 2023 6:30 PM GMT

பிளஸ்-1 மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செட்டி திருக்கோணம் காங்கேயம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 47). விவசாயி. இவரது மகள் தேன்மொழி (17). இவர் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த 15-ந் தேதி தேன்மொழியின் தாத்தா-பாட்டி ஆகியோர் வீட்டு வேலை செய்யவில்லை என திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த தேன்மொழி வீட்டை விட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன தேன்மொழியை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்