< Back
மாநில செய்திகள்
சென்னை ரெயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் இன்று முதல் உயர்வு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

சென்னை ரெயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் இன்று முதல் உயர்வு

தினத்தந்தி
|
1 Oct 2022 3:29 AM GMT

சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 8 ரெயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

இன்று முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 8 ரெயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரல்,எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரெயில் நிலையங்களிள் நடைமேடை கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

விழாக்காலங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் ரெயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் ரூ.10 லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த கட்டண உயர்வானது வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்