< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
நகரசபை தலைவர், அமைச்சரிடம் மனு
|2 Oct 2022 8:47 PM GMT
அம்பையில் வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்ற வேண்டும் என நகரசபை தலைவர், அமைச்சரிடம் மனு அளித்தார்
அமபை:
அம்பை நகரசபை தலைவர் கே.கே.சி.பிரபாகரன் சென்னை தலைமை செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அதில், அம்பை நகராட்சிக்கு தேவையான சாலை வசதி, கூடுதல் குடிநீர் திட்டப்பணிகள், தூய்மை பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்ற வேண்டும், என்று தெரிவித்து இருந்தார்.