< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
|31 Oct 2022 6:45 PM GMT
பெரியகுளம் பாலசுப்பரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது
பெரியகுளத்தில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 25-ந்தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று மாலை சண்முகர்- வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பெரியகுளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.