< Back
மாநில செய்திகள்
தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு ஊர்வலம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
3 Jun 2022 6:29 PM GMT

ஆம்பூரில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஆம்பூர்

ஆம்பூர் நகராட்சி சார்பில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் நேற்று ஆம்பூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு என் குப்பை என் உரிமை, பிளாஸ்டிக்கை வாங்காதே, பூமி தாங்காதே, நெகிழிகளின் தாக்கம் கழிவுகளின் தேக்கம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

ஆம்பூர் நகரமன்ற தலைவர் பி.ஏஜாஸ் அகமத், நகரமன்ற துணைத்தலைவர் எம்.ஆர்.ஆறுமுகம், நகராட்சி ஆணையர் ஷகிலா, தாசில்தார் மகாலட்சுமி, நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், வசந்த் ராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்