< Back
மாநில செய்திகள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தினத்தந்தி
|
25 July 2022 4:06 PM GMT

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதி, பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தனிநபர் கடன் உதவித்தொகை, தொடர்பான மனுக்கள் என 433 மனுக்கள் பெறப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா? என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு முத்து மாதவன் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் குணசேகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்