< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
|20 July 2022 11:21 AM GMT
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது
தமிழக அரசு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் 3-வது புதன்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 20 பேர் மனுக்களை கொடுத்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த போலீஸ் சூப்பிரண்டு, அவர்களின் புகார்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.