< Back
மாநில செய்திகள்
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

தினத்தந்தி
|
11 July 2022 6:10 PM GMT

ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார். நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, கிராம பொது பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

மொத்தம் 291 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

கூட்டத்தில், சமூக நலத்துறை சார்பில் 18 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள், 9 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், துணை கலெக்டர்கள் சுரேஷ், சேகர், தாரகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்