< Back
மாநில செய்திகள்
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

தினத்தந்தி
|
7 Sep 2023 9:14 PM GMT

திருவையாறில் போலீஸ் துறை சார்பில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் போலீஸ் சூப்பிரண்டு கலந்து கொண்டார்

திருவையாறு:

திருவையாறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நடுக்காவேரி, மரூர், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு குறைதீர்க்கும் முகாம் போலீஸ் சார்பில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் உத்தரவின்பேரில் திருவையாறு தியாகராஜர் திருமண மண்டபத்தில் நடந்த முகாமிற்கு திருவையாறு துணை போலீஸ் ராமதாஸ் தலைமை தாங்கினார். இதில் இன்ஸ்பெக்டர்கள் வனிதா, ஜெகதீசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து நிலத்தகராறு, குடும்ப பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. இதில் 30 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

மேலும் செய்திகள்