< Back
மாநில செய்திகள்
புதிய நிலக்கரி சுரங்கங்கள் குறித்து மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
மாநில செய்திகள்

புதிய நிலக்கரி சுரங்கங்கள் குறித்து மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
4 April 2023 7:59 AM GMT

புதிய நிலக்கரி சுரங்கங்கள் குறித்து மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 11 இடங்களிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்திலும் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இது குறித்து வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறியதாவது:-

"புதிய நிலக்கரி சுரங்கங்கள் குறித்து மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்துக்கும் அனுமதி இல்லை என்பதால் பயப்பட தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்