< Back
மாநில செய்திகள்
மக்களைத்தேடி மருத்துவ முகாம்
கரூர்
மாநில செய்திகள்

மக்களைத்தேடி மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
6 July 2022 6:02 PM GMT

மக்களைத்தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள புங்கோடை குளத்துப்பாளையம் பகுதியில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மக்களைத்தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் செவிலியர்கள், சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் நேரடியாக வீடுகளுக்கே சென்று முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு மற்றும் உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

மேலும் செய்திகள்