< Back
மாநில செய்திகள்
திருப்பூர் கடை வீதிகளில் மக்கள்கூட்டம்
திருப்பூர்
மாநில செய்திகள்

திருப்பூர் கடை வீதிகளில் மக்கள்கூட்டம்

தினத்தந்தி
|
11 Sep 2022 1:10 PM GMT

திருப்பூர் கடை வீதிகளில் மக்கள்கூட்டம்

அனுப்பர்பாளையம்

விடுமுறை மற்றும் முகூர்த்த நாளையொட்டி திருப்பூர் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

சுபநிகழ்ச்சிகள்

ஆவணி மாதம் பிறந்த நாள் முதல் திருப்பூரில் திருமணம், சீர், காதணி விழா, புதிய கட்டிடங்கள் திறப்பு விழா என ஏராளமான சுபமுகூர்த்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருப்பூரில் உள்ள ஜவுளி, நகை, பேன்சி, பூக்கடை, ஓட்டல் உள்ளிட்ட கடைகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் அதுபோன்ற கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக முகூர்த்த நாள் என்பதால் சுற்று வட்டாரத்தில் நடைபெற்ற திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

கடை வீதிகளில் குவிந்தனர்

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருப்பூரின் முக்கிய கடை வீதிகளில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர். குறிப்பாக புதுமார்க்கெட் வீதி பகுதியில் உள்ள கடைகளில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

அங்குள்ள சாலைகளிலும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா, சினிமா தியேட்டர்கள், காதர்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வடமாநில இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.

----

திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை படத்தில் காணலாம்.

============

Related Tags :
மேலும் செய்திகள்