< Back
மாநில செய்திகள்
குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
7 May 2023 7:15 PM GMT

குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை வெளிப்பாளையம் பெருமாள் கீழ வீதி பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால்அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் மூக்கை மூடியபடி அந்த வழியாக சென்று வருகின்றனர். குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்