< Back
மாநில செய்திகள்
சேதம் அடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

சேதம் அடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
8 March 2023 7:00 PM GMT

சட்டநாதபுரம் ஊராட்சியில் சேதம் அடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சட்டநாதபுரம் ஊராட்சியில் சேதம் அடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சேதமடைந்த சாலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்குவெளி கிராமத்திற்கு செல்ல சாலை வசதி உள்ளது. இந்த சாலையை வடக்குவெளி, ஆறுமுக வெளி, கற்பகம் நகர், தட்சிணாமூர்த்தி நகர், வைத்தீஸ்வரன் நகர், ஐம்பொன் நகர், கற்பக விநாயகர் நகர், தனலட்சுமி நகர், சிவனார் விளாகம், திருத்தோணிபுரம், திட்டை, தில்லைவிடங்கன், சக்தி நகர், செம்மங்குடி, சன்சிட்டி நகர், சின்னத்தம்பி நகர், வ.உ.சி. கிழக்கு தெரு, கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

வடக்கு வெளி கிராமம் அருகில் பள்ளிகள் இருப்பதால், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் சாலையை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சாலை கடந்த சில ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது.

விரைந்து சீரமைக்க வேண்டும்

சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் செய்திகள்