< Back
மாநில செய்திகள்
வக்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி மகா தீபம் ஏற்றப்பட்டது
விழுப்புரம்
மாநில செய்திகள்

வக்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி மகா தீபம் ஏற்றப்பட்டது

தினத்தந்தி
|
14 Jun 2022 4:55 PM GMT

திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி மகா தீபம் ஏற்றப்பட்டது

திண்டிவனம்

திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரையில் பிரசித்தி பெற்ற வக்ர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணர்மி தினத்தன்று மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி வைகாசி மாத பவுணர்மியை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு கோவிலின் மேல் பிரகாரத்தில் அமைந்துள்ள பீடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதைப் பார்த்து அங்கே திரண்டு நின்ற பக்தர்கள் ஓம் காளி, வக்ர காளி, ஜோதி, ஜோதி, வக்ரகாளி ஜோதி, ஜோதியை பார்த்தால் பாவம் தீரும் என கோஷமிட்டபடி தரிசனம் செய்தனர். இதில் திருவக்கரை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

முன்னதாக வக்ரகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவிலில் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகளை இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் சிவாகரன் செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் உமாமகேஸ்வரி, சிவாச்சாரியார் குருக்கள் சேகர், மேலாளர் ரவி ஆகியோர் செய்திருந்தனர். மகா தீபத்தை ஒட்டி விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

மேலும் செய்திகள்