< Back
ஆன்மிகம்
திண்டுக்கல்
ஆன்மிகம்
கோவில் கும்பாபிஷேகம்
|19 Jun 2022 3:59 PM GMT
பட்டிவீரன்பட்டியில் நரசிங்கபெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
பட்டிவீரன்பட்டியில் அமைந்துள்ள நரசிங்கபெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 17-ந்தேதி கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. 2–-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவின்போது வானில் கருடன் வட்டமடித்ததை கண்ட பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். அதனையடுத்து மூலவர் நரசிங்கபெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேசன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.