< Back
மாநில செய்திகள்
ரெயிலை பார்த்து அலறியடித்து ஓடிய பயணிகள்... காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

ரெயிலை பார்த்து அலறியடித்து ஓடிய பயணிகள்... காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பு

தினத்தந்தி
|
18 Jun 2024 12:29 AM GMT

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில், நள்ளிரவு காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது.

வேலூர்,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. நள்ளிரவு சுமார் 11.45 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரெயில் என்ஜினின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான நிலையில் வாலிபரின் பிணம் ஒன்று சிக்கியிருந்தது. இதனைக் கண்ட ரெயில் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு கீழே இறங்கிய ரெயில் என்ஜின் டிரைவர், ரெயிலில் வாலிபர் பிணம் சிக்கி இருந்ததை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து ரெயில் என்ஜினில் சிக்கி இருந்த வாலிபர் பிணத்தை மீட்டனர். அப்போது வாலிபர் உடலில் இரண்டு கால்களும் துண்டாகி இருந்தது. மேலும் ரெயிலில் சிக்கி இழுத்து வந்ததால் உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்களும், தலையின் பின் பகுதி சிதைந்தும் இருந்தது. துண்டான வாலிபரின் கால்கள் எங்கு கிடக்கிறது என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்