< Back
மாநில செய்திகள்
ஓடும் பஸ்சில் பரோட்டா மாஸ்டர் திடீர் சாவு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ஓடும் பஸ்சில் பரோட்டா மாஸ்டர் திடீர் சாவு

தினத்தந்தி
|
30 Aug 2023 6:57 PM GMT

தியாகதுருகத்தில் ஓடும் பஸ்சில் பரோட்டா மாஸ்டர் திடீரென இறந்தார்.

தியாகதுருகம்,

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே சந்தவாசல்வெள்ளூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி மகன் மணிகண்டன் (வயது 36). இவர் ரிஷிவந்தியத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் திருவண்ணாமலை செல்வதற்காக ரிஷிவந்தியத்தில் இருந்து தனியார் பஸ்சில் ஏறி தியாகதுருகத்துக்கு புறப்பட்டார். இந்த நிலையில் தியாகதுருகத்துக்கு பஸ் சென்றதும் அதில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கினர். ஆனால் மணிகண்டன் இறங்காமல் சீட்டிலேேய இருந்தார். இதைபார்த்து சந்தேகம் அடைந்த சக பயணிகள், அவரை எழுப்ப முயன்றனர். அப்போது தான் மணிகண்டன் ஏற்கனவே இறந்திருந்தது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் மணிகண்டன் இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். ஓடும் பஸ்சில் பரோட்டா மாஸ்டர் திடீரென இறந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்