< Back
மாநில செய்திகள்
பரமத்திவேலூரில்  ரூ.6 லட்சத்து 61 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

பரமத்திவேலூரில் ரூ.6 லட்சத்து 61 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

தினத்தந்தி
|
2 Sep 2022 5:40 PM GMT

பரமத்திவேலூரில் ரூ.6 லட்சத்து 61 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்திவேலூர்:

பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 22 ஆயிரத்து 555 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.79.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ.66.79-க்கும்‌, சராசரியாக ரூ.78.39-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.16 லட்சத்து 18 ஆயிரத்து 976-க்கு ஏலம் நடைபெற்றது.

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு ‌8 ஆயிரத்து 768 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.80.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ.63.49-க்கும், சராசரியாக ரூ.76.19-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 61 ஆயிரத்து 531-க்கு ஏலம் ேபானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்