< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

பொன்னமராவதி அருகே பள்ளத்துப்பட்டி கண்மாயில் மீன்பிடி திருவிழா

தினத்தந்தி
|
18 March 2023 7:30 PM GMT

பொன்னமராவதி அருகே பள்ளத்துப்பட்டி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

பொன்னமராவதி ஒன்றியம் வேந்தன்பட்டி நெற்குப்பை செல்லும் சாலையில் உள்ள பள்ளத்துபட்டி கண்மாயில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் நெற்குப்பை, திருக்களாம்பூர், வேந்தன்பட்டி, ஏனாதி, மேலைச்சிவபுரி, கருப்புக்குடிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மீன்பிடி வீரர்கள் கலந்து கொண்டனர், முன்னதாக கண்மாய் கரையில் சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வெள்ளை வீசிய பின்பு ஏராளமானோர் கண்மாயில் இறங்கி ஊத்தா, கச்சா, வலை, தூரி உள்ளிட்டவைகளை பயன்படுத்தி ஜிலேபி, கட்லா, பாப்லெட், கெண்டை, விரால் உள்ளிட்ட மீன்களை பிடித்து சென்றனர். பின்னர் இந்த மீன்களை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குழம்பு வைத்து சாப்பிட்டனர். இதனால் பள்ளத்துப்பட்டி கிராமத்தில் மீன் குழம்பு வாசனை கமகமத்தது.

மேலும் செய்திகள்