< Back
மாநில செய்திகள்
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் - 27ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை...!
மாநில செய்திகள்

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் - 27ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை...!

தினத்தந்தி
|
24 Jan 2023 12:05 PM GMT

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27ம் தேதி நடைபெறவுள்ளது.

திண்டுக்கல்,

பழனி முருகன் கோவிலில் வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை ஒட்டி இந்துசமய அறநிலையத்துறை மற்றும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 ஜனவரி 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. கடைசியாக பழனி கோவிலுக்கு கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வருகிற 27ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்