< Back
மாநில செய்திகள்
பெயிண்ட் அடித்த தொழிலாளி தவறி விழுந்து சாவு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

பெயிண்ட் அடித்த தொழிலாளி தவறி விழுந்து சாவு

தினத்தந்தி
|
29 July 2023 6:45 PM GMT

பெயிண்ட் அடித்த தொழிலாளி தவறி விழுந்து சாவு

மதுரை மாவட்டம் திருமங்கலம் உச்சப்பட்டி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் சத்யராஜ்(வயது 33). இவர் காரைக்காலில் உள்ள ஒரு கடையில் வேலைபார்த்து வந்தார். நேற்று வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் பெயிண்ட் அடிக்கும் பணி நடந்தது. டிராலி மேல் நின்றுகொண்டு சத்யராஜ் பெயிண்ட் அடித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது டிராலியின் சக்கரம் உடைந்து திடீரென அவர் கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்