< Back
மாநில செய்திகள்
சின்ன வெங்காய நடவு பணிகள் தீவிரம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சின்ன வெங்காய நடவு பணிகள் தீவிரம்

தினத்தந்தி
|
28 May 2023 6:57 PM GMT

சின்ன வெங்காய நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சின்ன வெங்காயம் பயிர் சாகுபடி செய்வோர் அதிகம் உள்ளனர். தற்போது அதற்கான பருவகாலம் என்பதால் நடவு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாயிகள் முதலில் வயலை நன்கு உழுது இயற்கை உரமான எரு உள்ளிட்டவற்றை நிலத்தில் இட்ட பின்னரே விதை வெங்காயத்தை வயலில் நடவு செய்கின்றனர். இப்பகுதி விவசாயிகள் வெங்காயத்தின் விலை அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும் பயிர் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்