< Back
மாநில செய்திகள்
கொலை வழக்கில் கைதான மேலும் ஒருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

கொலை வழக்கில் கைதான மேலும் ஒருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
20 Sep 2023 11:45 PM GMT

கொலை வழக்கில் கைதான மேலும் ஒருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.


பொள்ளாச்சி,


பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் அருண்கார்த்திக் (வயது 24). டிரைவர். இவர் தனது நண்பர்களான சூர்யபிரகாஷ் (26), அருண்ராஜ் (23) ஆகியோருடன் கடந்த மாதம் 10-ந்தேதி சந்திராபுரம் பகுதியில் உள்ள கல் குவாரிக்கு மது அருந்த சென்றார். அப்போது பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அருண்கார்த்திக்கை, சூரியபிரகாஷ், அருண்ராஜ் ஆகியோர் கல்லால் தாக்கி கொலை செய்தனர்.

இதுகுறித்த பொள்ளாச்சி நகர மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சூர்யபிரகாஷ் கடந்த வாரம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மேலும் அருண்ராஜ் மீதும் பல்வேறு வழக்குகள் இருந்ததால், அவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து உத்தரவு நகல் அருண்ராஜிடம் கொடுக்கப்பட்டது.


மேலும் செய்திகள்