< Back
மாநில செய்திகள்
வாகனம் மோதி ஒருவர் படுகாயம்
கரூர்
மாநில செய்திகள்

வாகனம் மோதி ஒருவர் படுகாயம்

தினத்தந்தி
|
18 Oct 2023 5:56 PM GMT

வாகனம் மோதி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

தோகைமலை அருகே உள்ள கே.புதுப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 43). இவர் சம்பவத்தன்று தோகைமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், பெருமாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், ேதாகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்