< Back
மாநில செய்திகள்
ரெயில் மோதி ஒருவர் சாவு
கரூர்
மாநில செய்திகள்

ரெயில் மோதி ஒருவர் சாவு

தினத்தந்தி
|
24 July 2023 6:57 PM GMT

ரெயில் மோதி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

குளித்தலை ரெயில் நிலையம் அருகே சுமார் 48 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ெரயில் மோதி இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்தவர் குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 48) என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்